பிளஸ்டூ மாணவி தற்கொலை

by Staff / 19-10-2022 05:18:34pm
 பிளஸ்டூ மாணவி தற்கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் குதிரைசாரி குளத்தை சேர்ந்த தில்லையப்பன் என்பவரது மகள் திருமங்கலத்தில் உள்ள அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மாணவி ஆன்ராய்டு செல்போன் வைத்துள்ளார். ஆகவே அடிக்கடி செல்போனில் மூழ்கியதால் அவருக்கு படிப்பில் நாட்டம் குறைந்தாக தெரிகிறது

இதனை பெற்றோர்கள் கண்டித்தனர். அவரிடமிருந்து செல்போனை வாங்கி கொண்டனர்.
தனது செல்போனை திருப்பி தருமாறு கேட்டு கடந்த 2 நாட்களாக மாணவி முத்துபிரியா வீட்டில் சண்டையிட்டு சாப்பிடாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் விரக்தியடைந்த மாணவி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via