வெள்ள நீர்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

by Editor / 20-10-2022 10:06:30pm
வெள்ள நீர்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையிலிருந்து,இன்று அமராவதி ஆற்றில் 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, மேலும் குதிரையாறு அணை நீரும், மடத்துக்குளம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மழை நீரும் கலந்து அமராவதி ஆற்றில் ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.இந்நிலையில் மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories