புதுப்பெண் கொலை. கணவர் வீட்டு முன்பு உடல் புதைப்பு.

by Staff / 15-04-2023 12:35:41pm
புதுப்பெண் கொலை. கணவர் வீட்டு முன்பு உடல் புதைப்பு.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். கட்டிட காண்டிராக்டரான இவருடைய மகள் ஜெனிலா ஜோபி (வயது 23). என்பவருக்கும்சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த 8 மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜெனிலா ஜோபியும் கணவரும் பெங்களூரில் அவரது குடும்பத்தினருடன் தங்கி வந்தார்.இந்தநிலையில் சேம் மரியதாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.கடந்த 11-ந் தேதி இரவு ஜெனிலா ஜோபி வழக்கம் போல் தூங்க சென்றார். நள்ளிரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கணவர் சேம் மரியதாஸ் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கர்நாடக மாநிலம் தொட்டாபள்ளபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேம் மரியதாசை கைது செய்தனர். பின்னர் ஜெனிலா ஜோபியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஜெனிலா ஜோபியின் உடலை பெற்றோர் வீட்டில் புதைக்காமல், கணவரின் வீட்டின் முன்பகுதியில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.இதற்காக அவரது வீடு அமைந்துள்ள கருங்கல் திப்பிரமலை பகுதிக்கு உடலை கொண்டு வந்தனர். அந்த வீட்டில் தற்போது சேம் மரியதாஸின் பாட்டி மட்டும் வசித்து வருகிறார்.இதனை தொடர்ந்து புதுப்பெண்ணின் உடல் வீட்டின் வளாகத்தில் வாசல் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேலும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

 

Tags :

Share via