செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff / 28-08-2023 02:58:19pm
செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை இன்று 28-ம் தேதி வரை நீட்டித்த சிறப்பு நீதிமன்றம், அவரை நேரில் இன்று ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டார். அவர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via