மீனவர்கள் வேலைநிறுத்தம்.

by Editor / 22-08-2023 08:35:00am
மீனவர்கள் வேலைநிறுத்தம்.

வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இரவு 3 பைபர் படகுகளில் வந்த கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஆறுகாட்டுதுறை மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

 

Tags : மீனவர்கள் வேலைநிறுத்தம்.

Share via