5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

by Staff / 05-03-2024 12:33:01pm
5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ராசையா (29) என்பவர் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல கைலாஷ் குமார் என்பவர் மியூசிக்கல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் ஆசிரியர்கள் தவறாக நடந்ததை பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் குற்றம் உறுதியானது. இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via