திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
வாத்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் கண்ணன் வயது 27 இவருக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை இதனால் ஏக்கத்தில் இருந்த இவர் ஏற்கனவே ஒரு முறை விஷமறிந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது வீட்டின் கூரையில் கயிற்றை மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து வந்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை மீட்டு பிணக்கூறாயாவுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :