.. 45 குரங்குகள் விஷம் வைத்து கொலை

by Staff / 26-10-2022 10:33:39am
.. 45 குரங்குகள் விஷம் வைத்து கொலை

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமம் அருகே வனப்பகுதி நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இஇந்நிலையில், சிலகம் வனப்பகுதிக்குள் குரங்குகள் இறந்து அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கியதை கண்டு அஞ்சிய அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ரைந்து சென்ற வனத்துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் அங்கேயே இறந்த குரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உள்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிலகம் கிராமத்தில் குரங்குகள் இல்லை என்றும் தெரிவித்தனர். வேறு இடத்தில் விஷமிகள் சிலர் விஷம் வைத்து அந்த குரங்குகளை கொன்றிருக்கலாம் என்றும் பின்னர் டிராக்டர் மூலம் அந்த குரங்குகளின் உடல்களை வீசிச் சென்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
 

 

Tags :

Share via