குஷ்பு குறித்து ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி

by Staff / 28-10-2022 12:35:02pm
குஷ்பு குறித்து ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், பாஜக நிர்வாகியான குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பு, இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக கனிமொழி எம்பி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். யாராக இருந்தாலும் இதுபோன்ற பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள கனிமொழி, தனது கட்சியும் தலைவர் ஸ்டாலினும் இதனை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.

 

Tags :

Share via