ரூ.3.5 கோடி தங்கக்கடத்தலில் சிக்கிய 2 பெண் குருவிகள்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு ரூ.3.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பேஸ்ட் வடிவத்தில் தங்கம் கடத்தி வந்த 2 பெண்களும் தப்பினர்.
அவர்கள் விமான நிலையத்தில் இருந்து தப்பி காரில் ஏறி சென்ற நிலையில், அவர்கள் இரண்டு பேரும் தங்கம் கடத்தி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் செல்லும் வழிகளில் உள்ள செக் போஸ்டுகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதன்படி நடந்த சோதனையில் புவனகிரி மாவட்டம் பந்தங்கி சுவங்கச்சாவடியில் நடந்த சோதனையில் 2 பெண்களிடமும் தங்கம் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 கோடி என்றும் மதிப்பிடப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
Tags :