போக்ஸோ 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

by Editor / 02-11-2022 06:17:56pm
போக்ஸோ 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சார்ந்த கதிர்வேல்சாமி என்பவர் அதே  பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2020_ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீ.வில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று மேற்படி நபரை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.என விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் தெரிவித்து உள்ளார்.


 

 

Tags :

Share via