பேரனை கொன்றுவிட்டு பாட்டியும் தற்கொலை

by Staff / 26-11-2023 04:26:22pm
பேரனை கொன்றுவிட்டு பாட்டியும் தற்கொலை

ஈரோடு மாவட்டம் .புளியம்பட்டி நகராட்சி நாவலர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (50). இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், போலியாவால் பாதிக்கப்பட்ட மகன் நவீன்குமார் (30), இரண்டாவது மனைவி, மற்றும் பொன்னுசாமியின் தாய் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். பேரன் நவீன் குமார் சக்கர நாற்காலியில் நடமாடுவதை கண்டு மனவேதனையில் இருந்த மூதாட்டி சுப்பம்மாள் பேரனை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து புளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via