கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல் கிராமத்தை காலி செய்த மக்கள் .

by Editor / 03-11-2022 07:01:20am
கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல் கிராமத்தை  காலி செய்த மக்கள் .

 ஓசூர் அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள்  இயங்கி வருகின்றன. இதனால் அக்கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், குவாரியில் எழும் தூசியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், சாலைகளில் குழிகள் விழுந்து சேதமடைந்து வருவதாகவும் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு எந்த தீர்வும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தநூற்றுக்கும் மேற்பட்ட  கிராம மக்கள்  ஆடு, மாடுகளுடன் தங்களது உடைமைகளை எடுத்துகொண்டு கிராமத்தை காலி செய்து ஓசூர்கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவதற்காக சென்றனர்.

இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய வருவாய் துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் ஓசூர் ஏ.எஸ்.பி அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அவர்களது சொந்த கிராமத்துக்கே அனுப்பி வைத்தனர்.இதன் காரணமாக பரப்பரப்பு உருவானது.

 

Tags :

Share via