அரிய வகை சங்குகள் பறிமுதல்

by Admin / 25-02-2022 04:35:46pm
அரிய வகை சங்குகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக அரிய வகை சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் தூத்துக்குடி ரயில் நிலைய பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரயில் நிலைய பகுதியில் சந்தேகப்படும்படி ஆட்டோ ஒன்று நின்றுகொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆட்டோவை சுற்றிவளைத்து சோதனை செய்கையில் அதில் அட்டைப்பெட்டிகளில் மூட்டை மூடையாக தடைசெய்யப்பட்ட சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவற்றை பறிமுதல் செய்த அதிகார்கள், கடத்தலில் ஈடுபட்ட முஹம்மது ஹுசைன், மீராஷா மரைக்காயர் ஆகிய இருவரையும் கைது செய்து தடைசெய்யப்பட்ட சங்குகளை  கைப்பற்றினர். 

 

Tags :

Share via