பாலியல் தொழிலில் ஈடுபட்ட வங்கதேச பெண்கள் சிறையில் அடைப்பு.

by Admin / 05-07-2021 05:44:21pm
பாலியல் தொழிலில் ஈடுபட்ட வங்கதேச பெண்கள் சிறையில் அடைப்பு.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட வங்கதேச பெண்கள் சிறையில் அடைப்பு.

கடலுாரில் வங்க தேச பெண்களை சட்ட விரோதமாக தங்க வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கர்களை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலுார், பெரிய கங்கணாங்குப்பத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த நாஜ்மூர் ஷித்தர் 35; மனைவி பரிஜா பீவி, 25; ஷக்தர் முல்லா 50; பாபுஷேக் 22; பாத்திமா 25 மற்றும் 3 வயது சிறுவன் என ஆறு பேர் தங்கியிருந்தனர்.

இவர்களுக்கு அடிக்கடி சர்வதேச போன் அழைப்பு வந்ததால் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், 2ம் தேதி மத்திய உளவுத் துறை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கி, 'ஆன்லைன்' மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிந்தது.ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, ஷக்தர் முல்லா உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

இதில், மூன்று ஆண்கள் சென்னை சைதாப்பேட்டை சிறையிலும், இரண்டு பெண்கள் புழல் சிறையிலும் நேற்று அடைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, கடலுாரில் வீடு எடுத்து தங்க வைத்து, புதுச்சேரி உட்பட பல பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் கவின், தனுசு ஆகியோரை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

 

Tags :

Share via