முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

by Staff / 25-08-2023 02:03:20pm
முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை கோட்டூர்புரம் முருகன் கோவில் பின்புறம் முன்விரோதம் காரணமாக பால்ராஜ் என்பவரை அப்பகுதியை சேர்ந்த. நான்கு பேர் கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டம்பால் கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த பால்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணமடைந்தார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், சித்ரா நகரைச் சேர்ந்த இளைஞர்களான முரளி, விவேக், தினேஷ், அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைதாகி ஜாமீனில் வெளிவந்தனர். அரவிந்த் மட்டும் தலைமறைவாகி இருந்த நிலையில், மற்ற மூவர் மீதான வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி D. லிங்கேஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

Tags :

Share via