செல்போன் டவரில் ஏறிய பெண்ணால் பரபரப்பு 

by Editor / 21-06-2021 07:45:15pm
செல்போன் டவரில் ஏறிய பெண்ணால் பரபரப்பு 

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை  சேர்ந்தவர் அபிதா . இவரின் தந்தை அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர் 
அப்போது அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.  
இதில் மனமுடைந்த அபிதா செங்கோட்டை  சாலையில் உள்ள செல்போன் டவரில் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் கூறி, டவரில் நின்று கொண்டு கீழ் இறங்க மறுத்து வருவதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தகவல் அறிந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனாலும் இரவு 7 மணி வரை அவர் கீழே இறங்கவில்லை.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via