குடிபோதையில் தொழிலாளி தற்கொலை

by Staff / 13-03-2023 12:27:13pm
குடிபோதையில் தொழிலாளி தற்கொலை

கோபி அருகே உள்ள மோனக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் குடிபோதையில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடலில் தீப்பற்றியதும் அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று, அவருடைய உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பிரபு இறந்தார். இதுகுறித்து கடத்தூர் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via