தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை?ராஜபாளையத்தில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.

by Editor / 27-02-2024 09:48:40am
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை?ராஜபாளையத்தில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.  நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை?என்று ராஜபாளையத்தில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.பொதுமக்கள் புரிந்து  நாடாளுமன்ற உறுப்பினரை கண்டா வரச் சொல்லுங்க என்று கூறியிருக்கும் போஸ்டர் வாசகம் மக்கள் மத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குள்ராஜபாளையம்  சட்டமன்றத் தொகுதி வருகிறது இதற்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார்  எம்பி ஆக உள்ளார். அவர்  எப்போதுமே தொகுதி பக்கம் எட்டிப் பார்த்ததே கிடையாது. எப்போதாவது ஏதாவதுஒரு நிகழ்வுக்கு வந்து செல்வார் என்றும் பொதுமக்கள் உண்மையாகவே தங்கள் தொகுதி எம்பி யார் ? என்பதை மறந்து விட்ட நிலையில் கண்டா வரச் சொல்லுங்கள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை?என்ற போஸ்டர் ஒட்டியுள்ளது உண்மைதான் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த போஸ்டரை மாற்று கட்சியினர் ஒட்டி இருக்கிறார்களா அல்லது சொந்த கட்சிக்காரர்களே அரசியல் உள்நோக்கத்தோடு ஒட்டி இருக்கிறார்களா என்பது புரியாத புதிராக இருக்கிறதுஎன்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை?ராஜபாளையத்தில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.
 

Tags : தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை?ராஜபாளையத்தில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.

Share via