காவல், தீயணைப்பு துறையில் பணியாற்றும் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள்

by Editor / 13-01-2022 05:13:09pm
காவல், தீயணைப்பு துறையில் பணியாற்றும் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள்

காவல், தீயணைப்பு துறையில் பணியாற்றும் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் நிலை 1, தலைமைக்காவலர், ஹவில்தார், சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் 120 அலுவலர்களுக்கும் சிரைத்துறையில் 60 பேருக்கும் பதக்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பதக்கங்கள் பெறுபவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் மாதாந்திர பதக்கப்படியாக ரூ.400 வழங்கப்படும். காவல் வானொலி பிரிவில் 6 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல், தீயணைப்பு துறையில் பணியாற்றும் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள்
 

Tags :

Share via