விஷம் குடித்து பெண் பரிதாபமாக பலி

by Staff / 28-12-2022 12:31:23pm
 விஷம்  குடித்து பெண் பரிதாபமாக பலி

தூத்துக்குடி நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (53). இவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதில் மனம் உடைந்த சுப்புலட்சுமி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via