தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜக பிரமுகர் கைது

by Editor / 13-01-2022 11:27:16pm
தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜக பிரமுகர் கைது

பஞ்சாப் சென்ற பிரதமர் மோடிஅந்த மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை காரணம்  காட்டி, நிகழ்ச்சியை ரத்து செய்தார். இந்த சம்பவத்தை ஒட்டி பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.இந்த நிலையில்  பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் மனிதச்சங்கலி ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.அப்போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி வைத்து, அதில் பழங்கள் விற்பனை செய்து வரும் முத்துசாமி (55) என்பவர், பிரதமர் மோடியை பற்றி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த பாஜகவினர், சாலையோர வியாபாரிமுத்துசாமியை தாக்கினர், தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தாக்கியதில் அவர் காயம் அடைந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவினர்  மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து 2பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via