செய்யாத குற்றத்திற்காக கொடூரமாக சித்தரவதை -ராஜாசிங் வாக்குமூலம்

by Editor / 04-11-2022 10:51:17pm
செய்யாத குற்றத்திற்காக கொடூரமாக சித்தரவதை -ராஜாசிங் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று முக்கிய சாட்சியாக ஆஜரான ராஜாசிங் என்பவர் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர், “தந்தை, மகன் இருவரும் சிறையில் இறந்தபோது நான் சிறையில் இருந்தேன். இருவரும் நடக்க முடியாமல் முகம் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தனர். இருவரிடமும் என்ன நடந்தது என கேட்டபோது சாத்தான் குளத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதல் பேரில் விடிய விடிய போலீசார் அடித்ததாக கூறினர். வேறு ஒரு வழக்கில் என்னையும் 3 நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்தரவதை செய்தனர்.செய்யாத குற்றத்திற்காக என்னை கொடூரமாக சித்தரவதை செய்து, பின் கையெழுத்து பெற்றுக்கொண்டு சிறையில் அடைத்தனர்” என தெரிவித்தார்.

 

Tags :

Share via