ஏரிக்குள் விழுந்த விமானம் 26 பேர் மீட்பு.
தான்சானியா நாட்டில் உள்ள புகோபா நகரின் விக்டோரியா ஏரியில் உள்நாட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று துரதிர்ஷடவசமாக விழுந்து விபத்துக்குள்ளானது. உடனே அங்கு கூடிய மீட்பு துறையினர் மீட்புப் பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வடமேற்கு நகரமான புகோபாவில் விமானம் தரையிறங்குவதற்கும் சிறிது நேரத்திற்கு முன்பு இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தானது, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது. விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :