டெங்கு காய்ச்சல் 5 நாட்களுக்கு விடுமுறை

by Staff / 07-11-2022 11:07:24am
 டெங்கு காய்ச்சல்  5 நாட்களுக்கு விடுமுறை

அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக டெங்க காய்ச்சல் பரவி வருகிறது. தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால், தடுப்பு நடவடிக்கையாக திபு நகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் உள்பட அங்கன்வாடி நிலையிலுள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது. இதன்படி இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை இந்த விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு பரவலை தடுக்க 10 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 20 ஆயிரம் பேரை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

 

Tags :

Share via