4 பேரை கொலை செய்த சிறுவன்
திரிபுரா மாவட்டம் தலாய் மாவட்டத்தின் துரை ஷிப் பாரி கிராமத்தில், கமல்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றிற்கு வெளியே இருந்த குழியில் உடல் ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, வீட்டிற்கு வெளியே இருந்த அந்த குழியை சந்தேகத்தின்பேரில் தோண்டியபோது 3 உடல்கள் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 4 உடல்களில் 3 பேர் பெண்கள். ஒருவர் ஆண் என தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இதுகுறித்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் நான்கு பேரை படுகொலை செய்துள்ளான் என்பது அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், சிறுவனை கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :