பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 % இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இதற்கு சமமான அளவு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து பேசிய பாமக கட்சியின் நிறுவனரும் தலைவருமான ராமதாஸ், ”எந்த அடக்குமுறைகளையும் அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என கூறி 10% இடஒதுக்கீடு வழங்குவதும், அதை உச்சநீதிமன்றம் ஏற்பதும் சமூக நீதி மீதான தாக்குதல்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags :