சிவசங்கர் பாபா வழக்கில் 5 பேர் ரகசிய வாக்குமூலம்

by Editor / 24-06-2021 09:45:19am
சிவசங்கர் பாபா வழக்கில் 5 பேர் ரகசிய வாக்குமூலம்


செங்கல்பட்டு--பாலியல் புகாரில் சிக்கிய, பள்ளி உரிமையாளர் சிவசங்கர் பாபா வழக்கில், இரண்டு முன்னாள் மாணவியர் உட்பட ஐந்து பேர், நீதிபதிகளிடம் நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த, புதுப்பாக்கத்தில், 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று மாணவியர் போலீசில் புகார் அளித்தனர்.இதையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டு, சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.சிவசங்கர் பாபாவை, சமீபத்தில் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், 17ம் தேதி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி., காவலில் விசாரிக்கும் மனு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அம்மனு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.இதற்கிடையில், சிவசங்கர் பாபாவை பற்றி, முன்னாள் மாணவியர் இருவர் உட்பட ஐந்து பேரிடம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரகசிய வாக்குமூலம் பெற்றனர்.

 

Tags :

Share via