உண்மையான ஜனநாயகத்தில் இல்லை: ஜெகன் மோகன்
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வில் இல்லை என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரம்மாண்டமான, விசாலமான நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததற்காக நான் நரேந்திர மோடிஜியை வாழ்த்துகிறேன். ஜனநாயகத்தின் கோயிலாக இருக்கும் நாடாளுமன்றம் நமது தேசத்தின் ஆன்மாவைப் பிரதிபலிப்பதோடு, நமது நாட்டு மக்களுக்கும், அனைவருக்கும் சொந்தமானது. இத்தகைய மங்களகரமான நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வில் இல்லை'' என குறிப்பிட்டுள்ளார்.
Tags :