வாகனங்களில் பம்பர் தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்
வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பம்பர் காரணமாக விபத்தின் போது கார்களில் ஏர்பேக் செயல்படுவதில்லை எனக் கூறி மத்திய அரசு இந்த தடையை விதித்தது.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும். பம்பருக்கு தடை விதித்தது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் ஐகோர்ட் தலையிட முடியாது. பம்பருக்கு தடை எனும் மத்திய அரசின் உத்தரவை மாநில அரசுகள் கடுமையாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
Tags :