அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நவ.18 வரை மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை உத்தரவு

by Editor / 15-11-2022 09:07:13am
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நவ.18 வரை மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை உத்தரவு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நவ.18 வரை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக, திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன், திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதுச

சென்னை, கல்லூரிக் கல்வி இயக்குநரின் கடிதத்தின்படி, 2022-23ஆம் கல்வியாண்டில், கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவில், மாணவர்களுக்கு விண்ணப்பங்களை நேரடியாக வழங்கி, உரிய விதிமுறைகளை பின்பற்றி 18.11.22 முடிய மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். அரசு
உதவி பெறும் கல்லூரிகளை பொறுத்தமட்டில், முதலில், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18 தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் கலைவாணி தெரிவித்தார்.

 

Tags :

Share via