குடும்ப தகராறு மனைவி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 20-11-2022 02:58:17pm
குடும்ப தகராறு மனைவி தூக்கிட்டு தற்கொலை


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள செங்கனிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (32). இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சி அடுத்த நெகனூர்பட்டியை சேர்ந்த சங்கீதா (28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், செல்வராஜுக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சங்கீதா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சங்கீதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து சங்கீதாவின் தந்தை சேகர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via