சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

by Staff / 22-11-2022 10:58:17am
சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி என்ற பகுதியில் வசிப்பவர் சக்கரபாணி(38). இவர் இந்து முன்னணியில் மாநகரச் செயலாளராக உள்ளார். இவர் வீட்டின் முன் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், தன் பெயர் கும்பகோணத்தில் பரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை ;க்கரபாணி ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via