படகு போட்டியை கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்
தூத்துக்குடியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, படகு போட்டியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவரணி சார்பில் மாபெரும் படகு போட்டி நடைபெற்றது.தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற இப்போட்டியை திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தபோட்டியில் 15 பைபர் படகுகள் மூலம் 7 கிலோமீட்டர் தூரம் போட்டியில் நடைபெற்றது.இதில் முதல் இடத்தை திரேஸ்புரத்தை சேர்ந்த ராஜ் என்பவரும், இரண்டாவது இடத்தை ராஜேஷ் என்பவரும், மூன்றாவது இடத்தை லிட்டில் என்பவரும் வெற்றி பெற்றார்கள்வெற்றி பெற்றவர்களை கனிமொழி எம்பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்.முன்னதாக, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் பெண் கவுன்சிலர்கள் ஆகியோர் மியூசிக்கல் சேர் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
.
Tags :