கல்குவாரி விபத்தில் சிக்கிய ஆறாவது நபரை தேடும் பணி நாளை தொடரும் ஆட்சியர் விஷ்ணு தகவல்
நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்கபட்ட 5 வது நபர் காக்கைகுளம் செல்வகுமார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.உடல் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். கல்குவாரி விபத்தில் சிக்கிய ஆறாவது நபரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் காவல் துறையினருடன் நாளை தொடரும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல் தெரிவித்துள்ளார்.
Tags : Collector Vishnu informed that the search for the sixth person involved in the Calcutta accident will continue tomorrow