மத்திய அரசின் கள விளம்பரப் பிரிவு கண்காட்சி
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் குழந்தைகளுக்கான ஐம்பதாயிரம் காப்பீட்டுத் திட்டம், சமையல் எரிவாயு மானியம் ரூ. 300 மற்றும் உலகத் தமிழ் மாநாடு புதுச்சேரியில் நடத்துவதற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவித்ததற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். நளினி பார்த்தசாரதி, மத்திய கலாச்சார அமைச்சகம், லலித் கலா அகாடமியின் பொதுக் குழு உறுப்பினர் மற்றும் தேசிய விருத்தாளர் திருமதி மாலதி செல்வம், சித்த மருத்துவர் திரு. பாஸ்கர் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்ற மாணவிகளுக்கு துணை நிலை ஆளுநர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
Tags :