மதுரை ரயில் தீ விபத்து - 5 பேர் கைது

by Staff / 28-08-2023 02:42:29pm
மதுரை ரயில் தீ விபத்து - 5 பேர் கைது

மதுரையில் நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சிலிண்டர் மூலம் சமைக்க முயற்சி மேற்கொண்டபோது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். இங்கு 2வது நாளாக தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பேசின் டிராவல்ஸ் ஊழியர்களான சத்திய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம் கஷியப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via