ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

by Editor / 28-11-2022 07:06:39am
 ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில்  மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

குஜராத் மாநிலம் கதிர்காம் சட்டமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் சிறுவன் ஒருவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் பேசுகையில், தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பாஜக குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் வீசும் கற்களை துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்வோம் என்றும் கூறினர்.

 

Tags :

Share via