ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை திடீர் திருப்பம்

by Staff / 01-12-2022 01:06:47pm
ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை திடீர் திருப்பம்

கடலூர் மாவட்டம் மலையனூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவரின் மனைவி சுமதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சுமதி காலமானார். சுமதி இறப்பதற்கு முன்பே, சிவகுருநாதன், சென்னையில் தங்கி ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டின் ஓனருடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் திருமணம் செய்யாமலே குழந்தையும் பெற்றுள்ளனர்.சுமதி இறப்பிற்கு பின் மலையனூர் வந்து தங்கிய சிவகுருநாதன் அதன் பின்பு சென்னை செல்லவில்லை என தெரிகிறது. இதனால் இவரின் சென்னை மனைவி, குழந்தை மற்றும் மாமியார் ஆகியோர் மலையனூர் வந்த தங்கியிருந்துள்ளனர். இந்தநிலையில் தான் இன்று காலை இவர்கள் மூவரின் சடலமும் பெருமாள் கோவில் அருகே உள்ள கிணற்றில் இருந்து கிடைத்துள்ளது. அதனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இது கொலையா? தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via