ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

by Editor / 03-12-2022 07:40:50am
 ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த  மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் மீது ரயில் மோதியதில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்லஜ் ஆற்றின் மீது உள்ள லோம்ஹாட் ரயில் பாலம் அருகே உள்ள கிராத்பூர் சாஹிப் என்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த நான்கு குழந்தைகள் ரயில் வருவதை கவனிக்கவில்லை.

இதனால் ரயில் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளது. மற்றொரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via