பயணிகள் உயிரோடு விளையாடிய அரசு பேருந்து ஓட்டுனர்கள்

by Editor / 03-12-2022 04:40:27pm
பயணிகள் உயிரோடு விளையாடிய அரசு பேருந்து ஓட்டுனர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 2 அரசுப் பேருந்துகள் ஒன்றையொன்று முந்தி செல்ல முயன்றபோது, எதிரே இருசக்கர வாகனம் வந்ததால் பிரேக் அடித்தபோது நிலை தடுமாறி பேருந்து கவிழந்தது. இதில் சுழன்றுகொண்டே சென்று சாலைக்கு மறுப்பக்கம் விழுந்தது. இதில் பயணித்த பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மழை பெய்ததால் பிரேக் பிடித்ததும் பேருந்து கவிழந்ததாக ஓட்டுநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் பயணிகளின் உயிரோடு விளையாடிய ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via