தண்ணீர்...தண்ணீர் ..; ரூ.10,000 இழப்பீடு
ரயில் கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கில், கேரளாவைச் சேர்ந்தவருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் டிசம்பர் 13, 2015-ல் நடந்தது. கிருஷ்ணன் என்பவர் தனது மனைவியுடன் பன்வேலில் (மும்பை) இருந்து வடகரா (கோழிக்கோடு) நேத்ராவதி எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார். சபரிமலை சீசன் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணத்தின் தொடக்கத்திலிருந்தே ரயிலில் தண்ணீர் இல்லாததால், பெட்டிக்குள் இருந்த பயணிகள் கழிப்பறைக்கு பயன்படுத்த பாட்டில் தண்ணீரை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது.
பயணம் தொடங்கும் முன் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டதாக இந்திய ரயில்வேயின் வாதத்தை நிராகரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அந்த நபருக்கு இழப்பீடாக ரூ.10,000 வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Tags :