பாஜகவில் இருந்து விலகுகிறார் - திருச்சி சூர்யா
பாஜக பெண் பிரமுகர் பற்றி ஆபாசமான பேச்சு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கேசவ விநாயகம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அக்கட்சியை சேர்ந்த திருச்சி சூர்யா ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இத்துடன் என் பாஜக உடனான உறவை முடித்துக்கொள்கிறேன். அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் என கூறியுள்ளார்.
Tags :