அரசு பேருந்து மோதி பலி
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் வண்டிமேடு பகுதியில், சாலையில் இன்று காலை நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாதுரை மீது அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :