போன் கொடுக்காததால் புதுப்பெண் தற்கொலை

by Staff / 09-12-2022 12:07:04pm
போன் கொடுக்காததால் புதுப்பெண் தற்கொலை


ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஷைலு என்பவருக்கும், கங்காபிரசாத் ரெட்டிக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர்.ஷைலு போனை அதிக நேரம் பயன்படுத்தி வந்துள்ளார். கணவர் போனை ஒதுக்கி வைத்து விட்டு வீட்டு விஷயங்களில் கவனம் செலுத்துமாறு கூறிவந்துள்ளார். ஆனாலும் அவர், தனது ஸ்மார்ட்போனுடன் அதிக நேரம் செலவழித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன், கணவர் மனைவி ஷைலுவின் ஸ்மார்ட்போனை (புதிய கடவுச்சொல்) லாக் செய்தார். இதனால் மனமுடைந்த இளம்பெண் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via