குழந்தையை தூக்கி எறிந்து கொலை

by Staff / 11-12-2022 03:44:16pm
குழந்தையை தூக்கி எறிந்து கொலை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பெண் தனது 10 மாத குழந்தையுடன் வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பயணத்தின் நடுவில், டிரைவர் உட்பட சக பயணிகள் அவரிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இதை அந்த பெண் கடுமையாக எதிர்த்ததால், அவரது குழந்தையை தூக்கி வண்டிக்கு வெளியே வீசியுள்ளனர். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. பின்னர் அந்த பெண்ணையும் வெளியே தள்ளிவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மாண்ட்வி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.

 

Tags :

Share via