பள்ளியில் அடிதடி மாணவர் மரணம்

by Staff / 14-12-2022 12:12:22pm
பள்ளியில் அடிதடி மாணவர் மரணம்

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் சிவம். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்களுடன் சண்டையில் ஈடுப்பட்டுள்ளார். அதில் அம்மாணவர்கள் இவரை தாக்கியதில் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via