ஆட்டோவில் நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம்

by Staff / 16-12-2022 11:23:39am
ஆட்டோவில் நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம்


மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் மணி (29), மல்கீத் சிங் பண்டி (24) ஆகியோர் ஆட்டோ ஓட்டுநராகவும், கிளீனராகவும் பணியாற்றி வருகின்றனர். புதன்கிழமை இரவு, பாதிக்கப்பட்ட மாணவி அவர்களின் ஆட்டோவில் பயணித்த போது, இருவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.ரைத் பஹ்ரா பல்கலைக் கழகம் அருகே அவர்களிடமிருந்து மிகவும் போராடி தப்பி ஓடிய மாணவி போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர்.

 

Tags :

Share via