ஆட்டோ டிரைவர் கொலை: சகோதரன், தாய் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மேல பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூல்சாமி என்ற கொம்பையா. இவருடைய மகன்கள் பாண்டித்துரை (29), கருப்பசாமி (26). இவர்கள் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர். நேற்று இரவில் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கருப்பசாமியை, பாண்டித்துரை இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக பாண்டித்துரை மற்றும் அவரது தாயார் ராமலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :