வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

by Staff / 19-12-2022 01:18:19pm
வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக பழ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திண்டிவனம் வட்டம், கிடங்கல் - 2, கலைஞா் கருணாநிதி தெருவைச் சோந்த ஆறுமுகம் மகன் அப்புகுமாா் (30). இவா், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பழக்கடை நடத்தி வந்தாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்னா் அப்புகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துகாக வாங்கிய கடனை அடைப்பதில் அப்புகுமாருக்கும், அவரது சகோதரா் சம்பத்குமாருக்கும் கடந்த சில நாள்களாக பிரச்னை இருந்து வந்தது.இந்த நிலையில், சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய அப்புகுமாா் பின்னா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் தேடியபோது, கிடங்கலை அடுத்த காவேரிபாக்கம் ஏரியில் உள்ள ஆலமரத்தில் அப்புகுமாா் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

Tags :

Share via